மனநலம் குன்றிய 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர்!
தேன்கனிக்கோட்டை அருகே மனநலம் குன்றிய இளம் பெண் பாலியல் துன்புறத்தல் போக்ஸோவில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேன்கனிக்கோட்டை போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
தேன்கனிக் கோட்டை அருகே அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் குன்றிய 11 வயது இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் கிராமத்திற்கு சென்ற போலீசார் சுரேஷ்யை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உண்மை என தெரியவந்ததையடுத்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறைச்சாலையில் அடைத்தனர்.
Tags :