வீடுகட்டித் தருவதாகக் கூறி பணமோசடி: பாஜக தலைவர் மீது வழக்கு

by Editor / 05-09-2021 12:20:50pm
வீடுகட்டித் தருவதாகக் கூறி பணமோசடி: பாஜக தலைவர் மீது வழக்கு

காங்கயம் பழையகோட்டை சாலை பகுதியில் வசிப்பவர் இளங்கோ பிரசாத். இவரது மனைவி சந்தியா (30). இவர், அப்பகுதியில் வீட்டுமனை வாங்க முடிவு செய்திருந்தார். அப்போது, தொட்டியப்பட்டி என்ற இடத்தில் தாமரை நகர் என்று வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையை பார்த்து, அதில் இருந்த எண்ணை தொடர்புகொண்டார். கலா நடராஜன் என்பவர் விவரங்களை அளித்துள்ளார். இவர், காங்கயம் நகர பாஜக தலைவராக வும் உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தாமரைநகர் சைட் உரிமையாளர் முத்துசாமிஎன்பவரிடம் இரண்டு இடங்களை வாங்கி, கிரயம் செய்து சந்தியாவிடம், கலா நடராஜன் அளித்துள்ளார். மேலும், வீடு மற்றும் கோயில் கட்டித் தருவதாகக்கூறி, அடுத்த சில நாட்களில் ரூ.3.5 லட்சத்தை கலா நடராஜன் வாங்கியுள்ளார்.

அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முறையே ரூ. 2 லட்சம்,ரூ. 3 லட்சம் என மீண்டும்பணம் பெற்றுள்ளார். ஆனால், வீடு கட்டித்தராமல் காலம் தாழ்த்திவந்துள்ளார். வீடு கட்டுவதற்கான ஒப்பந்தத்தை வேறு ஒருவருக்கு சந்தியா அளித்துள்ளார்.

மேலும் தான் வீடு கட்டுவதற்காக அளித்த அட்வான்ஸ் தொகை ரூ.8.5 லட்சத்தை திருப்பித்தருமாறு கலா நடராஜனிடம் கேட்டுள்ளார். பணம் தரமுடியாது எனக் கூறியதோடு, சந்தியாவின் வீடு கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்குச் சென்று, பணியாட்களை கலா நடராஜனும்,அவரது மகனும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via