மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு: 100%-பேர் தேர்ச்சி
தமிழ்நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. மதுரை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 91. 79% பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சியை பெற்று உள்ளனர். இதில் மதுரை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 23 ஆண்கள், ஒரு பெண் உள்பட 24 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சிறைவாசி அறிவழகன் என்பவர் 363 மதிப்பெண்கள் மற்றும் சிறைவாசி உதயகுமார் 360 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
Tags :