வகுப்புகள் திறப்பு எப்போது?- அமைச்சர் அன்பில்

by Editor / 12-09-2021 11:16:30am
வகுப்புகள் திறப்பு எப்போது?- அமைச்சர் அன்பில்

திருச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

''நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரும்போது அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளன.

நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.

பள்ளிகளில் மாணவர்கள் வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கையை செப்.15-ம் தேதிக்குப் பிறகு முதல்வரிடம் அளிப்போம். அதனடிப்படையில், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

 

Tags :

Share via