பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவிலிருந்து விலகி இருப்பது வரவேற்கத்தக்கது- கே.எஸ்.அழகிரி

by Editor / 16-09-2021 11:53:16am
பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவிலிருந்து விலகி இருப்பது வரவேற்கத்தக்கது- கே.எஸ்.அழகிரி

திருவள்ளூரில் நடைபேற்ற கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே. எஸ் அழகிரி கூறியதாவது, காங்கிரஸின் பார்வையோடு தன்னுடைய பார்வையும் ஒத்துப் போகிறது என்று திருமாவளவன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் புதிய ஆளுநர் ஜனநாயகத் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

திமுகவின் தொடக்கம் நல்ல தொடக்கம் எனவும் முதலமைச்சர் செயல்பாடு வரவேற்கத்தக்கது என்றார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவிலிருந்து விலகி இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய கூட்டணியை இழந்திருக்கிறது என்றார். அதே சமயத்தில் காங்கிரஸின் கூட்டணி வலிமையாக உள்ளது என்றும் இதுதான் இரு கூட்டணிகளுக்கிடையே உள்ள வித்தியாசம் என தெரிவித்தார்.

 

Tags :

Share via