சட்டீஸ்கர், பஞ்சாப் அரசியலில் எந்த சண்டையும் இல்லப்பா…

by Admin / 27-08-2021 03:27:25pm
சட்டீஸ்கர், பஞ்சாப் அரசியலில் எந்த சண்டையும் இல்லப்பா…

சட்டீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில அரசியலில் எந்தவொரு கலகமும் இல்லை என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக, அக்கட்சியை சேர்ந்த சிலர் போர்க்கொடி பிடித்து வருகின்றனர். இதுதவிர சட்டீஸ்கரிலும் முதல்வர் பூபேஷ் பாகெலுக்கு எதிராக மூத்த அமைச்சர் ஒருவரும் நாற்காலிக்கு சண்டையிட்டு வருகிறார். இதனால் இரு மாநிலங்களிலும் எந்நேரத்திலும் முதல்வர்கள் மாற்றப்படும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், அதுகுறித்து பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சட்டீஸ்கர் மற்றும் பஞ்சாப் அரசியலில் எந்த ஒரு கலகமும் இல்லை என தெரிவித்துள்ளார். அங்கு உள்விவகாரம் தொடர்பாக கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதாக தெரிவித்தார். மேலும் கர்நாடகாவில் அண்மையில் முதல்வர் மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், கர்நாடகா தலைவர் மாற்றப்பட்டதை, கட்சியில் ஏற்பட்ட கலகம் என கூறமுடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டீஸ்கர், பஞ்சாப் அரசியலில் எந்த சண்டையும் இல்லப்பா…
 

Tags :

Share via