வாக்காளர்களுக்கு செப். 29க்குள் பூத்சிலிப்

by Editor / 16-09-2021 06:14:00pm
வாக்காளர்களுக்கு செப். 29க்குள் பூத்சிலிப்

மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் 9 மாவட்டங்களில், மற்ற மாவட்டங்களில் காலியாகவுள்ள மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்., 6, 9 ம் தேதிகளில் நடக்கவுள்ளது.வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க தேர்தல் அலுவலர்கள் செப்., 15 முதல் 20 க்குள்பூத்சிலிப்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.செப்., 25 க்குள் அச்சிடும் பணியினை முடிக்க வேண்டும். செப்., 29 க்குள் அனைவருக்கும் பூத் சிலிப் விநியோகம் செய்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்தல் நடக்கும் நாளில் அந்தந்த ஓட்டுச்சாவடிகள் முன்பு பூத் சிலிப்களை பொறுப்பான அதிகாரிகளை கொண்டு விநியோகம் செய்ய அனைத்து தேர்தல் அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via