ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

by Editor / 20-09-2021 04:35:20pm
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு கூற சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோது வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

ஆனால் லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினர். பின்னர், இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அபோது ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து, ராஜேந்திர பாலாஜியின் மேல் முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via