பலநூறு பாம்பை பிடித்தவர் பாம்பு கடித்து மரணம்.

by Editor / 28-11-2021 02:54:19pm
பலநூறு பாம்பை பிடித்தவர் பாம்பு கடித்து  மரணம்.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கோடிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி. பாம்பு பிடிப்பதில் திறமைவாய்ந்தவரான இவர் இதுவரை 300 க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். இந்த நிலையில் கோடிஹாலா கிராமத்தின் ஒரு வீட்டில் சுமார் 5  அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததை கிராம மக்கள் பசவராஜிடம் தெரிவித்துள்ளனர்.  அவர் வழக்கம்போல பாம்பை பிடித்து சென்றுள்ளார்.இந்த நிலையில் மிகவும் கவனக்குறைவாக அவர் அந்த பாம்பை பையில் போட்டு மூடாமல்  கையிலே அவர் தூக்கிச்சென்றபோது அந்த பாம்பு சுமார் 5 முறை அவரை கடித்த‌தாக கூறப்படுகிறது. பாம்பு கடித்ததில் விஷம் தலைக்கேறிய நிலையில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

 

Tags :

Share via