பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

by Editor / 22-09-2021 07:57:34pm
பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தேவக்கோட்டை அருகே பெரியகாரை பகுதியை சேர்ந்த கதிரவன் (40) பாஜக தேவக்கோட்டை ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார் . அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் பார்த்து வந்தார் .
இவருக்கும் , காவனவயலை சேர்ந்த பெரியசாமி , வீரபாண்டி ஆகியோருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .


இந் லையில் , காவனவயலில் உள்ள டீக்கடையில் கதிவரன் நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெரியசாமி , வீரபாண்டி ஆகியோர் , கதிரவனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதில் பலத்த காயமடைந்த கதிரவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவக்கோட்டை தாலுகா போலீசார், கதிவரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

Tags :

Share via