இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில்  சீமானை சூர்யா அவமானப் படுத்தினாரா ?

by Editor / 25-09-2021 07:37:40pm
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில்  சீமானை சூர்யா அவமானப் படுத்தினாரா ?


சீமானை கிண்டல் செய்யும் படியாக படத்தில் காட்சிகளை வைத்துள்ளதாக நடிகர் சூர்யா மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சீமானிடம் அனுமதி பெற்றே படத்தில் காட்சிகளை வைத்ததாக அவரது தரப்பினரே விளக்கம் அளித்துள்ளனர். இதனால், சூர்யா ஒரு தெலுங்கர் என்பதால்தான் தமிழர் சீமானை அவமானப்படுத்துகிறார் என்ற விமர்சனமும் ஓய்ந்தது.


என் தம்பி சூர்யா என்று அடிக்கடி சொல்லி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சூர்யாவுக்கு எதிர்ப்புகள் வரும் போதெல்லாம் எங்களை தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் . சூர்யாவை அச்சுறுத்தவும் விரட்டவும் முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளை தரும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்து வருவார் சீமான். ஆனால் சீமானுக்கு எதிராக நடந்துகொண்டதாக ஒரு செய்தி பரவியது.


சூர்யா தயாரித்து வெளியிட்டிருக்கும் இராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தில் சீமானை கிண்டல் செய்து காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக நாம் தமிழர் சிலர் கொந்தளித்தனர்.

நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சீமான் போல் தோற்றம் கொண்ட ஒருவர் கரும்பச்சை சட்டை அணிந்து வருகிறார். அவர் பேட்டி கொடுக்கும் போது அவரின் பின்னால் நிறைய ஆட்கள் நிற்கிறார்கள். இது சீமான் பேட்டி கொடுக்கும்போது அவருக்கு பின்னால் இருக்கும் கட்சியினர் போல இந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், சீமான் அடிக்கடி தனது பேச்சில் இனமானம், தன்மானம், அம்பது வருஷமா தலையில மொளகா அரைச்சுடாங்க, வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை என்று பேசுவது போன்று இந்த கதாபாத்திரம் பேசுகிறது.

அதுமட்டுமல்லாமல் பேசும்போது அடிக்கடி மூக்கை தடவுவது சீமானின் மேனரிசம். அதையும் இந்த கேரக்டர் செய்கிறது.
சூர்யா ஒரு தெலுங்கர் என்பதால்தான் தமிழர் சீமானை அவமானப்படுத்துகிறார் என்று பலரும் கொந்தளித்து வந்தனர். ஆனால், ''படத்தின் இயக்குநர், அண்ணன் சீமான் அவர்களிடம் காட்சியைக் காண்பித்து ஒப்புதல் பெற்றப் பிறகே, திரைப்படத்தில் சேர்த்தார்'' என்று தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக்.

 

Tags :

Share via