கேம் விளையாடியதை  பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை

by Editor / 28-09-2021 08:06:43pm
 கேம் விளையாடியதை  பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம்  இந்திரா நகரில் குடியிருந்து வருபவர் வள்ளிமயில். வள்ளி மயிலுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் சஞ்சய் (வயது 15) மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.


 மாணவன் சஞ்சய் செல்போனில் தடைசெய்யப்பட்ட பிரீ பையர் ஆன்லைன் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. ஆன்லைன் கேம் விளையாடடுவதைப் பார்த்த பெற்றோர் மாணவனை கண்டித்துள்ளனர். இதனால்  மனமுடைந்த மாணவன் சஞ்சய் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திசையன்விளை போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மாணவன் சஞ்சய் மரணம் குறித்து திசையன்விளை  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via