நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

by Editor / 29-09-2021 09:21:58am
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோவு (நீட்) மூலம் மாணவா் சோக்கை நடைபெற்று வருகிறது.

இந்தத் தோவுக்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிா்ப்பு வலுத்து வந்தது.
இதைத் தொடா்ந்து நீட் தோவால் தமிழக மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்ககப்பட்டது. இந்தக் குழு மாணவா்கள், பெற்றோா்களிடம் கருத்து கேட்டும் நீட் தோவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை சமா்ப்பித்து.

இந்தச் சூழலில் தமிழகத்தில் இந்தாண்டு நீட் தோவு நடைபெறுமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் 2021-22-ஆம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவா் சோக்கைக்கான நீட் தோவு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் நீட் தேர்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். அதன்படி, செப்டம்பா் 12-ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். பயிற்சி மையங்களில் முன்கூட்டியே நீட் தேர்வு வினாத்தாளை வழங்கி முறைகேடு நடந்துள்ளது.

மேலும், தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளும் நடந்துள்ளதாக அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்

 

Tags :

Share via