குழந்தையை விட்டுவிட்டு தோழியுடன் ஓடிய இளம் பெண்

by Editor / 03-10-2021 12:22:17pm
குழந்தையை விட்டுவிட்டு தோழியுடன் ஓடிய இளம் பெண்

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அடுத்த பனங்காடியில் வசித்து வருபவர் சரவணன்.இவருடைய மனைவி 24 வயது ஜெயஸ்ரீ . 2019ல் திருமணம் நடந்த இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து அவரது கணவரும் பெற்றோர்களும் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். பல மாதங்கள் ஆகியும் ஜெயஸ்ரீ இருக்குமிடம் தெரியவில்லை.


இந்நிலையில் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த மதுரை ஐகோர்ட்டில் கணவர் சரவணன் ரிட் மனு தாக்கல் செய்தார். சமீபத்தில் ஜெயஸ்ரீ சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்ததை இருந்ததை கண்டறிந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அதில் அவர் கூறிய திடுக்கிடும் உண்மைகள் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்த போது ஜெயஸ்ரீயும், சக மாணவி துர்காதேவியும் நெருங்கிய பள்ளித் தோழிகள். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகும் இந்த பழக்கம் தொடர்ந்து வந்தது. ஜெயஸ்ரீ வீட்டில் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

கர்ப்பிணியாக இருந்ததால் அவரால் அப்போது தோழியை தேடி செல்ல முடியவில்லை. குழந்தை பிறந்த உடன், சில மாதங்களிலேயே குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு துர்காவை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டார்அங்கு தன்னுடைய சிகை அலங்காரத்தையும், உடையையும் ஆண் போல் மாற்றிக் கொண்டு ஒன்றாக இருந்து வந்தனர். ஜெயஸ்ரீ நான் எனது தோழியுடன் தான் வசிக்க விரும்புகிறேன். கணவருடனோ, குழந்தையுடனோ, பெற்றோருடனோ செல்ல விரும்பவில்லை. தன்னை கட்டாயப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்தார். ஜெயஸ்ரீயை கட்டாயப்படுத்த முடியாது.

அவருடைய விருப்பப்படி செல்லலாம் என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு முடிந்து கோர்ட்டுக்கு வெளியில் வந்த ஜெயஸ்ரீயை, குடும்பத்தினர் தங்களோடு வந்துவிடுமாறு கெஞ்சி அழைத்தனர். பெற்றெடுத்த குழந்தையை காண்பித்தும் மனம் இறங்கவில்லை. தன் தோழியுடன் செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். பெற்ற குழந்தையை விட்டு விட்டு தோழியுடன் வசிக்க விரும்பிய ஜெயஸ்ரீயின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via