அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்
பிரபல நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே 19ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்து, வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியதையடுத்து மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். சமீபத்தில் அவருக்கு அங்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் குடும்பத்தாருடன் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் இன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.
Tags : T. Rajender returned to Chennai after treatment in America