நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்

by Staff / 02-04-2022 04:40:58pm
நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்

அரிசிய தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிபிஐ மற்றும் காவல்துறையினர் சமூகத்தில் சட்டப்பூர்வமான அதிகாரத்தையும் மக்கள் நம்பிக்கையும் திரும்பப்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் என்.வி .ராமணா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் சிபிஐ அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய தலைமை நீதிபதி காவல்துறையினர் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார் .

மக்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது இடரான காலங்களிலும் காவல் நிலையங்களுக்கும் செல்ல தயங்குவதாக கூறினார் இலஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம் நடுநிலை தவறுதல் மற்றும் அரசியல் பின்னணியில் போலீசார் இருப்பதால் மக்களின் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தலைமை நீதிபதி விமர்சித்தார். 

 

Tags :

Share via