குண்டு  வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ்  பயங்கர அமைப்பு பொறுப்பேற்பு

by Editor / 09-10-2021 06:11:03pm
குண்டு  வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ்  பயங்கர அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் 55 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


 ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை என்பதால் சிறப்புத் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்த அடுத்த சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் ஏராளமானோர் உடல் சிதறி அதே இடத்தில் பலியாகினர்.


இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 55 பேர் பலியாகி உள்ளதாகவும் 143 பேர்  காயமடைந்துள்ளதாகவும்,  தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்  தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதிதான், உடலில் வெடிகுண்டுடன் வந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

 

Tags :

Share via