அந்தமானில்உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

by Admin / 12-11-2021 06:47:29pm
அந்தமானில்உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமானில்உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி பாலச்சந்திரன் தகவல்.

அந்தமானில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் தெரிவித்ததாவது:நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக பகுதியில் கரைய கடந்த பின் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட உள் தமிழக பகுதியில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுபெற்று 15ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியை நெருங்கும். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு” என்று கூறினார்.

மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மிக கனமழை 4 இடங்களிலும், கனமழை 24 இடங்களிலும் பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை - மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்க்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 13ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

14ஆம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், புதுவை, காரைக்கால் கடலூர் மற்றும் ஏனைய வட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via