ரயில்வே பாலம் இடிந்து விழுந்து இருவர் பலி

by Staff / 25-10-2023 12:19:47pm
ரயில்வே பாலம் இடிந்து விழுந்து இருவர் பலி

பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. கட்டுமானப் பணியில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பாலன்பூர் - அம்பாஜியை இணைக்கும் வகையில் 6 கான்கிரீட் பலகை கொண்ட பாலம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கட்டப்பட்டன. இது குறித்து கலெக்டர் வருண்குமார், புதிதாக பலகைகள் பதிக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறினார். குஜராத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாலங்கள் இடிந்து விழுவதாகவும், இதற்கு அரசு பதில் அளிக்காமல் இருப்பதாகவும் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via