திருடிய லாரியை விற்பதற்காக ஓட்டிச்சென்ற திருடன்

by Staff / 21-01-2023 12:58:53pm
திருடிய லாரியை விற்பதற்காக ஓட்டிச்சென்ற திருடன்

ஈரோடு சித்தோடு அருகே திருடிய லாரியை விற்பதற்காக கொண்டு சென்றபோது திருடனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சித்தோடு அருகே நசியனூர் வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (58). இவர் பப்பாளி பழச்சாறு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். அங்கிருந்து இரவில் லாரி திருடப்பட்டது. போலீஸ் விசாரணையில் நசியனூர் அருகே பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (26) என்பதும், இவர் பிரபல வாகன திருடன் என்பதும், இவன் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.லாரியை திருடி அதை கோவையில் விற்பதற்காக கொண்டு சென்றபோது சிக்கினார்.

 

Tags :

Share via