நல்லமநாயுடு காலமானார்.
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கினை விசாரித்த காவல்துறை அதிகாரி, மூச்சுத்திணறலால் காலமானார்.
சென்னை பெரவள்ளூர் சந்திரசேகரன் சாலையை சேர்ந்தவர் நல்லமநாயுடு. 83 வயதான இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இவர் ஊழல் தடுப்பு- காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றி இருந்தார்.
வயது மூப்பு காரணமாக, நோய்வாய்பட்டிருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
குடும்பத்தினர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல், சொந்த ஊரான தேனி மாவட்டம், சுப்புநாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது
Tags :