மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்பிக்களுடன் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை கூட்டம்.

by Editor / 18-11-2021 04:06:02pm
மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்பிக்களுடன் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை கூட்டம்.

ரயில்வே நிர்வாகத்துடன் தென் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை ரயில்வே காலனியில் இன்று வியாழக்கிழமை (18.11.2021)  நடைபெற்றது.தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பு வகிக்கும் கோபிநாத் மல்லையா தலைமை வகித்தார்.ரயில்வே நிர்வாகம் சார்பாக முதன்மை போக்குவரத்து மேலாளர் நீனு இட்டியரா,முதன்மை வர்த்தக மேலாளர் ரவி  வல்லூரி, ரயில்வே கட்டுமான நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பாராளுமன்ற  உறுப்பினர்கள் வைகோ, சு.வெங்கடேசன்,மாணிக்கம் தாகூர்,கொடிக்குன்னில் சுரேஷ்,எஸ்.ஞான திரவியம்,எஸ்.திருநாவுக்கரசர்,தனுஷ் எம். குமார்,பி.வேலுச்சாமி,முகமது அப்துல்லா,ஏ.விஜயகுமார்,சோமபிரசாத்,பி.ரவீந்திரநாத், கனிமொழி கருணாநிதி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ரயில்வே திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றுகாரணமாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரயிகளை மீண்டும் இயக்க வேண்டும்,கொல்லம்-நெல்லை பயணிகள் ரயில்,செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரயில்,செங்கோட்டை மதுரை பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில் களையும் இயக்க வலியுறுத்தப்பட்டது..

மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்பிக்களுடன் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை கூட்டம்.
 

Tags :

Share via