மழையின் காரணமாக ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

by Editor / 25-11-2021 07:13:29pm
மழையின் காரணமாக ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

பலத்த மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண் 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடியிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16235 தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் இன்று இரவு 09.15 மணிக்கு புறப்படும்படி  நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடியிலிருந்து இரவு மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் தூத்துக்குடி சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (நவம்பர் 25/26) நடு இரவு 12.15 மணிக்கு புறப்படும்படி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via