ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி 14-ந்தேதி பெறுகிறது..

by Editor / 12-12-2021 05:15:12pm
ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி  14-ந்தேதி பெறுகிறது..

தமிழக அரசின் தொலைநோக்குப்பார்வையில் 1989-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக கருணாநிதியின் ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்டது.
 
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்களில் சுமார் 1 கோடியே 6 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

மகளிர் சுயஉதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டத்தில் இதுவரை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது மேலும் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாளை மறுநாள் (14-ந்தேதி) நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
 

 

Tags :

Share via