தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் - 33-ம் கட்ட விசாரணை நாளை 13ஆம் தேதி தொடக்கம்.

by Editor / 12-12-2021 08:46:24pm
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் - 33-ம் கட்ட விசாரணை நாளை 13ஆம் தேதி தொடக்கம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 32-ம் கட்ட விசாரணை, கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. இதில், ஒரு மருத்துவர், போலீஸ் என மொத்தம், 41-பேருக்கு ஆணை சம்மன் அனுப்பிய நிலையில், 40-பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதையடுத்து, 32 ம்கட்ட விசாரணை  நிறைவடைந்தது.
இந்த சம்பவத்தின் 33-ம் கட்ட விசாரணை நாளை  13-ம் தேதியிலிருந்து 18-ம் தேதி வரையில் நடைபெறும் இந்த விசாரணை-க்காக கடந்த 2018-ம் ஆண்டு துப்பாக்கி சூடு நடைபெற்றபோது பணியில் இருந்த தென்மண்டல  போலீஸ் உயர் அதிகாரிகள், மற்றும் மாவட்டத்தில்  அப்போது பணியில் இருந்த  கலெக்டர்களிடம்  விசாரணை  செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேபோல், 34-ம் கட்ட  விசாரணையும், டிசம்பர் மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

Tags :

Share via