3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருநெல்வேலியில் உள்ள பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுபோல் சம்பவம் இனி தமிழகத்தில் நடக்காதவாறு இருப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், இக்குழு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களின் கட்டிடங்களின் தன்மைகள் குறித்து உடனடியாக ஆய்வுகள் நடத்தப்படும் என்றும்., இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
Tags :