தனியார் தொழிற்சாலையை  கண்டித்து 3ஆயிரம் பேர் மறியல் 

by Editor / 18-12-2021 12:59:55pm
தனியார் தொழிற்சாலையை  கண்டித்து 3ஆயிரம் பேர் மறியல் 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இதைக் கண்டித்து சுங்குவார்சத்திரத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் தொழிற் சாலையை கண்டித்து விடிய விடிய சாலை மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர்.இதனால் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள்அணிவகுத்துள்ளது.
 

 

Tags : People protest against private factory

Share via