குறைந்த விலைக்கு தங்கம் லட்ச கணக்கில் மோசடியில் ஈடுப்பட்ட தம்பதி கைது.

by Editor / 18-12-2021 06:06:08pm
குறைந்த விலைக்கு தங்கம் லட்ச கணக்கில் மோசடியில் ஈடுப்பட்ட தம்பதி கைது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு அறிமுகமான நம்மாழ்வார் பேட்டை பகுதியைச் சேர்ந்த மகாவீர்-கார்த்திகா தம்பதியர், பாலாஜியிடம் வெளிநாட்டில் இருந்து வரும் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தர தங்களிடம் ஆள் இருப்பதாகவும், சீட்டுப் பணத்தில் அதிக லாபம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பாலாஜி, மகாவீர்-கார்த்திகா தம்பதியரிடம் தனது வங்கிக் கணக்கில் இருந்த 16 லட்சத்து 7 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் பணம் பெற்று நீண்ட நாள் ஆகியும் சொன்னபடி தங்கம் வாங்கித் தராமலும், சீட்டுப் பணம் விவகாரத்திலும் முறையான பதில் அளிக்காமலும் தம்பதியினர் காலம் தாழ்த்தி வாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த பாலாஜி தன்னை ஏமாற்றிய தம்பதிகள் மீது காவல்துறை நடவடிக்கை வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மகாவீர்-கார்த்திகா தம்பதியரை கைது செய்து உரிய விசாரணை நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மகாவீர்-கார்த்திகா தம்பதியரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Couple arrested for swindling lakhs of gold at low prices

Share via