கூட்ட நெரிசலில் தவறிய குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கனிமொழி கருணாநிதி எம்.பி

by Editor / 10-07-2022 10:42:45pm
கூட்ட நெரிசலில் தவறிய குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடி நெய்தல் கலை விழாவில் இறுதி நாளான இன்று 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு,தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்களும் இவ் விழாவை ஆர்வமாக காண வந்தனர்.நெய்தல் விழாவின் நிறைவு நாளான இன்று ஆயிரகணக்கானோர்  குவிந்தனர் கூட்ட நெரிசலில் ஒரு  குழந்தை பெற்றோரைத் தேடி அழுது கொண்டிருந்தது அந்த குழந்தையை  கனிமொழி கருணாநிதி எம்பி மீட்டு தனது மடியில் பத்திரமாக வைத்திருந்தார்.‌ அந்த குழந்தை தேடி பெற்றோர்  வந்தவுடன் பத்திரமாக குழந்தையை கனிமொழி கருணாநிதி எம்பி ஒப்படைத்தார்.‌குழந்தையை கனிமொழி கருணாநிதி எம்பி மடியில் வைத்திருந்த போது ஏராளமானோர் செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

 

Tags : MP Kanimozhi Karunanidhi rescued the lost child in the crowd and handed it over to his parents

Share via