40 வயது கள்ளகாதலியை கொலை செய்த 26 வயது இளைஞன் கைது.

by Editor / 30-12-2021 03:35:58pm
 40 வயது கள்ளகாதலியை கொலை செய்த 26 வயது இளைஞன் கைது.

நாமக்கல் அருகிலுள்ள  கொசவம்பட்டியை சேர்ந்த லலிதா கணவரை இழந்த  40 வயதான இவரை  சிலநாட்களாக காணவில்லையென போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர்.இதனைத்தொடர்ந்து போலீசார் லலிதாவை தேடிவந்த நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைக்கவே அதனை வைத்து இரகசிய  கண்காணிப்பில் ஈடுப்படவே இதன்  தொடர்ச்சியாக அதே பகுதியை சேர்ந்த 26 வயதான எம்எஸ்சி பட்டதாரியான சுரேந்தர்  என்பவரை சந்தேகத்தின்  போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில்  லலிதாவின் கணவர் 20 ஆண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். லலிதா கடலை வியாபாரம் செய்துவந்ததாகவும்,.சுரேந்தரின் பெற்றோர் நடத்தி வந்த மளிகைக்கடை அருகில் லலிதா வசித்ததால் அவருக்கு சுரேந்தர் உதவி செய்துவந்துள்ளார். இந்த உதவி இருவருக்கும் இடையே கள்ளக்காதளாக மாறியுள்ளது. இவர்களது கள்ளக்காதல் சுரேந்தரின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள்   சுரேந்தருக்கு  வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். இதன்காரணமாக  சுரேந்தர் லலிதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.ஆத்திரமடைந்த, லலிதா அவரிடம் சென்று சண்டையிட்டதாக கூறப்படுகிறது.மேலும் வேறு யாரையும் நீ திருமணம் செய்யகூடாது என்றும் நாம் சென்னைக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம் என லலிதா சுரேந்தரை அழைத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 15ம் தேதி லலிதாவை ஒரு காரில் அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்ற சுரேந்தர் லலிதாவை  அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் திணித்து கிணற்றில் வீசியதாக போலீசார்  நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்தபோலீசார்  லலிதாவின் 4 பவுன் நகையை மீட்டனர்.

 

Tags :

Share via