காட்டுத்தீ பரவலால் பாதிக்கப்பட்டு 2 நகரங்கள் தீக்கிரை
அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ பரவலால் 2 நகரங்கள் எரிந்து சாம்பலாகின. பலத்த காற்றின் காரணமாக இந்த காட்டுத்தீ பரவியதால் பல வீடுகள் தீக்கிரையாகி விட்டன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறின.
அந்த மாகாணத்தின் பவுல்டர் பகுதியில் உள்ள 2 நகரங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
தீ பரவிய பகுதிகளில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
மேலும், காணாமல்போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Tags :