வேதா இல்லம் - அதிமுகவின் மேல் முறையீடு மனு தள்ளுபடி.

by Writer / 05-01-2022 11:25:27am
வேதா இல்லம் - அதிமுகவின் மேல் முறையீடு மனு தள்ளுபடி.

வேதா நிலையம் தொடர்பான அதிமுகவின் மேல்முறையீடு மனுவினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் அடங்கிய அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், மேல் முறையீட்டு வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, தீர்பளித்த நீதிபதிகள் அதிமுகவின் மேல் முறையீடு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

 

Tags :

Share via