நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று தனியார் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 07-01-2022 11:27:12pm
நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று  தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பாதிப்புகள் பரவி வருகின்றன.  இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது.  இன்று கொரோனா எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி உள்ளது.

சமீப நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் திரை துறையிலும் தொற்று ஏற்பட்டு வருகிறது. பாடகர் சோனு நிகாம், நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இந்தி நடிகர்கள் விஷால் டட்லானி, நடிகைகள் குப்ரா சைத் மற்றும் மிதிலா பால்கர் ஆகியோருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் கொரானா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.  இதனையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாக காவல் உதவி ஆணையர் மாரியப்பன், ஆய்வாளர் கணேஷ் பாண்டியன், எஸ்பிளனேட் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்,  ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி; பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களது வீடுகளில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via