ஹைட்ராலிக் ஆயில் காலி பேரல் வெடித்து இருவர் படுகாயம்.

by Editor / 08-01-2022 02:27:15pm
ஹைட்ராலிக் ஆயில் காலி பேரல் வெடித்து இருவர் படுகாயம்.

அம்பத்தூர் அருகே மேனாம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஹைட்ராலிக் ஆயில் வந்த காலி பேரலை கழிவு பொருட்கள் போட்டு வைக்க பயன்படுத்த கேஸ் கட்டிங் எந்திரம் மூலம் திறக்க முயற்சி செய்த போது பேரல் வெடித்தது.இந்த விபத்தில் வடமாநில ஊழியர் துக் மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராமன் ஆகிய இருவர் படுகாயமடைந்து அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

 

Tags :

Share via