பரப்பரப்பான காஸிபூர் மலர்ச்சந்தையில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

by Editor / 14-01-2022 03:16:02pm
பரப்பரப்பான காஸிபூர் மலர்ச்சந்தையில்  வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

டெல்லியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காஸிபூர் மலர்ச்சந்தை பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிப்பு.பையில் இருந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பான இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தையில் வெடிகுண்டை வைத்தது யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   பரபரப்பாக காணப்படும் பூச்சந்தையில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 
 

 

Tags :

Share via