அரியர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் -மாணவர்கள் மகிழ்ச்சி.

by Writer / 24-01-2022 05:22:41pm
அரியர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் -மாணவர்கள் மகிழ்ச்சி.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  என்ஜினீயரிங், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  

அந்த தேர்வுகள் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்கி 20-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கடந்த 21-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அரியர் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகலுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்’ என அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 879 மாணவ-மாணவிகள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை எழுத உள்ளனர். 

 

Tags :

Share via