இந்தியாவை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாற்ற முகேஷ் அம்பானி திட்டம் என தகவல்
நாட்டில் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு இந்தியாவை ஹைட்ரஜனை உற்பத்தி மையமாக மாற்ற 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைட்ரஜன் மூலம் மின்சார உற்பத்தி செய்வதில் இந்தியாவை முன்னோடி நாடாக மாற்றும் வகையில் இத்துறையில் முகேஷ் அம்பானி வரும் நாட்களில் அதிக அளவு முதலீடு செய்ய முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தின் ராம்நகர் பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளதாகவும் முகேஷ் அம்பானி ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
Tags :