ஒடும் ரயிலில் ஏற முயன்ற ஐடிஐ மாணவன் தவறி விழுந்து பலி.

by Admin / 04-02-2022 01:15:21pm
 ஒடும் ரயிலில் ஏற முயன்ற ஐடிஐ மாணவன் தவறி விழுந்து பலி.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பையா. இவரது ஒரே மகன் தயானந்தன். இவர் அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு பிட்டர் படிப்பை படித்து வந்தார்.

இன்று மாலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்பு முடிந்து புளியமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்த மாணவன் தயானந்தன் சென்னையிலிருந்து திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறும் பொழுது தவறிக் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு, உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களுடன் இருந்தவரை ஆம்புலன்ஸ் முலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

 

Tags :

Share via