இம்ரான் ஆதரவாளர்களுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை

by Staff / 18-05-2023 11:47:08am
இம்ரான் ஆதரவாளர்களுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை

'இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்' என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மே 9 அன்று பாகிஸ்தானில் நடந்த வன்முறை திட்டமிடப்பட்டது மற்றும் வேதனையானது என்று முனீர் கூறினார். மேலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களை எச்சரித்துள்ள அவர், இனி இது போன்று நடக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். பிடிஐ தலைவர் கைது செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

 

Tags :

Share via