கடல்சார் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி இருமடங்காக உயர்த்திய மத்திய அரசு திட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்.

by Staff / 07-06-2022 12:28:04pm
கடல்சார் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி இருமடங்காக உயர்த்திய மத்திய அரசு திட்டம்  அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்.

 ஐந்து ஆண்டுகளில் கடல்சார் பொருள் ஏற்றுமதி 50 ஆயிரம் கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிலையான மீன்பிடித்தல் கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் இலக்கை அடைய முடியும் என்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கையெழுத்திடப்பட்ட உள்ளதாக கூறிய அவர் அதேநேரத்தில் இங்கிலாந்து மற்றும் கனடா உடன் இதே போன்ற ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

 

Tags :

Share via