திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 15ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்.

by Editor / 12-11-2022 09:24:08am
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 15ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வசிக்கும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். கலை, அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த இளங்கலை பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் அனைவரும் டாட்டா நிறுவனத்தில் கணினி சேவைகள், வணிகத் தீர்வுகள் மற்றும் ஆலோசனை சார்ந்த பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள்.இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவோர் பல்கலைக்கழசு இணையதளத்தில் https://www.msuniv.ac.in/ தங்கள் சுயவிவர குறிப்பு தகவலை பதிவு செய்ய வேண்டும். நேரகாணலுக்கு வரும்போது சுயபதிவேடு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம். கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அல்லது ஏதாவது ஓர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0462 2563213, 2563437 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Tags :

Share via

More stories