28 ஆண்களுக்கு காதல் வலை வீசி வீழ்த்திய அபிநயா கைது.

by Editor / 03-12-2022 11:06:57pm
 28 ஆண்களுக்கு காதல் வலை வீசி வீழ்த்திய அபிநயா  கைது.

மதுரையை சேர்ந்த அபிநயா என்ற பெண் சமூக ஊடகங்கள் மூலமாக சுமார் 28 ஆண்களுக்கு காதல் வலை வீசி வீழ்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 4 பேரை திருமணமும் செய்துள்ளார். 4வது திருமணம் செய்தவரிடம் இருந்து 30 நாட்களில் பல சவரன் நகைகளுடனும், பணத்துடனும் தலைமறைவாகி உள்ளார். இதன்பிறகு காவல்துறையை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்துகொள்வதாக அபிநயா வாக்குறுதியும் அளித்தார். இதையடுத்து 4வது கணவர் கொடுத்த பேரில் அபிநயாவை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via