பிப்ரவரி 26ஆம் நாள் 6, 7, 8.ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லாத நாள் கடைபிடிப்பு

by Admin / 10-02-2022 05:24:14pm
பிப்ரவரி 26ஆம் நாள் 6, 7, 8.ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லாத நாள் கடைபிடிப்பு

தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகப்பை கொண்டு செல்லாத நாள் பிப்ரவரி 26 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது.

இதன் முக்கிய நோக்கமே மாணவர்களின் மன அழுத்தத்தையும் நீக்குவதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி உடல் நலம் மன வளத்தை மேம்படுத்துவது ஆகும்.

பள்ளிக்கு புத்தகங்களை எடுத்துச் செல்லாமல் அனுபவம் மூலம் வாழ்க்கை கல்வியை பெறுவதே இதன் நோக்கமாகும் இதன்படி மாடித்தோட்டம் தாவர வளர்ப்பு பராமரிப்பு பாரம்பரிய கலைகள் பற்றிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

புத்தகப்பை இல்லாத நாளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி பரிசுப் பொருட்கள் வழங்க ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி உள்ளது
 

 

Tags :

Share via