ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்கவேண்டும் -டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்..?
வெறுமனே கடிதங்களை எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்திற்குரியது.
தனுஷ்கோடி அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்கச் செய்வதுடன், இனிமேலும் இந்த அவலம் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Tags : ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்கவேண்டும் -டிடிவி தினகரன்