முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்க உள்ளார்.

by Editor / 13-02-2022 03:17:13pm
முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்க உள்ளார்.


சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி கடந்த 2021 நவ.,22 பதவியேற்றார்; அவருக்கு கவர்னர் ரவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் பொறுப்பு நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.அதனடிப்படையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசு தலைவர் கடந்த 10ஆம் தேதி  உத்தரவிட்டார்.இதன் தொடர்ச்சியாக முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை காலை 10 மணிக்கு ராஜ் பவனில் பதவியேற்க உள்ளார்.
 

 

Tags : Muneeswar Nath Bandari will take over as the Chief Justice of the Chennai High Court tomorrow.

Share via