வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்ற சொன்ன பாஜக முகவர்-போலீசார் விசாரணை
மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்ற சொன்ன பாஜக முகவர் கிரிராஜனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் பாஜக முகவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் தகவல் அளித்தனர். பா.ஜ.க. முகவர் கிரிராஜன் மீது ஏற்கெனவே பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது
Tags : பாஜக முகவர்-போலீசார் விசாரணை