மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகளை 22ஆம் தேதிவரை பார்வையிடலாம்.
தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பிற்கு தயார் செய்யப்பட்டு பின்னர் அங்கு அணிவகுப்பில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.மாநிலம் முழுவதுமுல்லா பல்வேறு மாவட்டங்களில் 23 நாட்களில் 2 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த இந்த அலங்கார ஊர்திகளை சென்னையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் சென்று வந்துள்ள இந்த அலங்கார ஊர்திகள் இன்று முதல் பிப்ரவரி 22ஆம் தேதிவரை மெரினா கடற்கரையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும்,இதனை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடலாம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Tags : Decorative vehicles can be visited at Marina Beach until the 22nd.