புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

by Admin / 23-02-2022 02:03:39pm
 புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனாலும், புதிய வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட வகைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் தாக்கும் என்பது தொடர்பான புதிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது.

இருதய ரத்த நாளங்களை கொரோனா வைரஸ் சேதப்படுத்தும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பது. 

கொரோனா வைரஸ் கிருமி உடலின் பல பகுதிகளை தாக்குகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது கொரோனா வைரஸ் நேரடியாக இருதய ரத்த நாளங்களை தாக்குவது இல்லை என்று தெரியவந்தது. ஆனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக சைட்டோ டாக்சிக் டிபன்ஸ் என்ற பாதுகாப்பு அமைப்பு அதிகரித்து இருதய ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இருதய ரத்த நாளங்களில் தொற்று பாதிப்பு ஏற்படாமலேயே சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொரோனா வைரஸ் கிருமிக்கு இருக்கிறது.

நோய் எதிர்ப்பு செல்களில் இருந்து கிருமியை அழிக்க சைட்டோ டாக்சிக் செல்கள் உருவாகின்றன. கொரோனா தொற்றின் போது இதன் அளவு அதிகரிக்கிறது. இதுதான் இருதய ரத்தநாள திசுக்களை தாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via