பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நொய்டா நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

by Admin / 23-02-2022 01:44:56pm
 பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நொய்டா நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். 

இப்படி வாகனம் ஓட்டும்போது சிறுவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
மேலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. 

இதனை  தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் நொய்டா நகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via