தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை -இந்திய வானிலை ஆய்வு மையம்

by Editor / 05-12-2023 08:12:18am
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை -இந்திய வானிலை ஆய்வு மையம்

மிக்ஜாம் புயலை அடுத்து ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து வடக்கே 200 கி.மீ தொலைவுக்கு விலகிச் சென்ற மிக்ஜாம் புயல், 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, தற்போது மசூலிப்பட்டினத்தை நெருங்குகிறது.

.

 

Tags : இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

Share via